You are here

திசா/புத்தி பொது பலன்

திசா/புத்தி பொது பலன்

jothidam
0
by aadhiguru

திசா நாதான் தரும் மறைமுக பலன்கள் ;

ஒரு கிரகம் தனது திசையை நடத்தும் போது நன்மை செய்யுமா அல்லது தீமை செய்யுமா என்பதை கீழ் காணும் கணிதம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

www.aadhiguru.com
1.ஜாதகரின் ஜனன நட்சத்ரத்தை முதலில் கண்டறிய வேண்டும் .
2.பின் திசா நாதன் நின்ற நட்சத்ரத்தை கண்டுபிடிக்க வேண்டும். 
3 .ஜனன நட்சத்ரம் முதல் திசா நாதன் நின்ற நட்சத்ரம் வரை எண்ணி கணக்கிட வேண்டும்.
4 .எண்ணி வந்த தொகையை - 7 - ஆல் பெருக்கி - 8 – ஆல் வகுக்க வேண்டும்.
5.மீதி வரும் எண்ணுக்கு பலன் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது = இது அந்த ஜாதகருக்கு அந்த திசையில் நடக்கும் என்பது சாஸ்திர விதி
6 .7 ஆல் பெருக்கி 8 ஆல் வகுத்து மீதி வரும் எண் பூஜ்யம் என்றால் 8 இக்கு உண்டான பலன் படி நடக்கும்.
7 . இதன் படி எல்லா திசைக்கும் கணக்கிட்டுப் பார்க்க வேண்டும்.
8 .எல்லா திசைகளும் நன்மை தரும் படி இருந்தால் அது ஒரு ராஜ யோக ஜாதகமே.

மீதி வரும் எண்ணுக்கு பலன்.

  • மீதி வரும் எண் 1 வந்தால் = ரோகம் 
  • மீதி வரும் எண் 2 வந்தால் = லாபம்
  • மீதி வரும் எண் 3 வந்தால் = வழி நடைப் பயணம்
  • மீதி வரும் எண் 4 வந்தால் = அடிமைத் தொழில்கள் 
  • மீதி வரும் எண் 5 வந்தால் = தன லாபம் 
  • மீதி வரும் எண் 6 வந்தால் = ஐஸ்வர்யம் 
  • மீதி வரும் எண் 7 வந்தால் = தன நஷ்டம்தான் 
  • மீதி வரும் எண் 8 வந்தால் == வழக்கு வியாஜ்யம் தான்.

www.aadhiguru.com

புத்தி நாதன் தரும் மறைமுகப் பலன்கள்.

 

  • மீதி எண் 1 என வந்தால் = ரோகம் 
  • மீதி எண் 2 என வந்தால் = லாபம் 
  • மீதி எண் 3 என வந்தால் = வழி நடைப் பயணம் 
  • மீதி எண் 4 என வந்தால் == அடிமைத் தொழில்கள் 
  • மீதி எண் 5 என வந்தால் = தன லாபம் 
  • மீதி எண் 6 என வந்தால் == ஐஸ்வரியம் 
  • மீதி எண் 7 என வந்தால் = தன நஷ்டம் 
  • மீதி எண் 8 என வந்தால் = வழக்கு வியாஜ்யம்

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
1 = திசா நாதன் நின்ற நட்சத்ரம் முதல் புத்தி நாதன் நின்ற நட்சத்ரம் வரை எண்ணி ,கணக்கிட வேண்டும் =

2 = எண்ணி வந்த தொகையை 7 ஆல் பெருக்கி 8 ஆல் வகுக்க மீதி வரும் எண்ணுக்கு மேலே கண்ட பலன் பார்க்கவும்-
-
3 = திசா நாதனும் , புத்தி நாதனும் , யோகம் தரும் வகையில் அமைந்து இருந்தால் , அந்த காலத்தில்தான் நல்ல பலன்கள் நடைபெறும் == இது உத்தமம் ஆகும் =

4 = திசா நாதனும் , புத்தி நாதனும் , அசுப யோகம் தரும் வகையில்தான் அமைந்து இருந்தால் , அந்த காலத்தில்தான் 
கெட்ட பலன்கள் நடைபெறும் = இது அசுபம் ஆகும் =
-
5 = திசா நாதன் யோகத்திலும் , புத்தி நாதன் அசுபத்திலும் இருந்தால் , அந்த புத்தி முடியும்வரை அசுப பலன்கள் நடக்கும்-
-
6 = திசா நாதன் அசுபத்திலும் , புத்தி நாதன் யோகத்திலும் , இருந்தால் , அந்த புத்தி முடிவதற்குள் நன்மை செய்வார்-

7 = மேலும் கோசார கிரககங்களின் நிலைகளையும் பார்க்கவும் ;

8 = திசா புக்தி என்பது == LONG PERIOD == நீண்ட கால பயணம் =

9 == புத்தி நாதன் என்பது = SHORT PERIOD = குறுகிய கால பயணம் == 
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
-
இதற்கு பரிகாரங்கள் :

அந்த கிரகங்களின் அதிதேவதைகள் , கிரகங்களின் கோவில்கள் , ஹோமம் , குலதெய்வ வழிபாடுகள் , இஷ்ட தெய்வ வழிபாடுகள் , அன்னதானம் , ஆடை தானம் , கோமாதா வழிபாடு , மகம் நட்சத்ரம் வரும் நாளில் , பசுவுக்கு அருகம்புல் , அகத்திக்கீரை , பழங்கள் , வெல்லம் பச்சரசி கலந்தது , அம்மாவசை வழிபாடு , முன்னோர்கள் வழிபாடு , தர்ப்பணம் , திதி , கொடுக்க நலம் உண்டாகும்.

  பொதுவாக ஜோதிடத்தில் தசா நாதன் வாயிலாகவே பலன்கள் நடைபெறும்.இதில் சில புத்திகளில் பலன்களின்  வலிமைகளில் மாறுபாடு ஏற்படும். அதாவது தசா நாதன் நல்ல யோக நிலையில் இருந்து தசை நடத்தினாலும் சில புத்திகளில் முன்னேற்றத்தில் தாமதம் ஏற்படுவதும்,மற்றும் தடை ஏற்பட்டு யோகம் நடைபெறுவதும், போன்ற நிலைகள் இருக்கும். 

  தசாநாதன் தீய நிலையில் இருந்து தசை நடத்தும் போது சில புத்திகள் தீய பலன்களை அதிகமாக செய்யும், நிலைகள் இருக்கும். 

 இதில்  எந்தந்த புத்திகளில். கவனமாக இருக்க வேண்டும் என்பதையும்.எந்த அமைப்பில்  புத்திநாதன் அமர்ந்தால் இந்த நிலை ஏற்படும் என்பதையும் தற்போது காணலாம். 

 6.8.12,க்கு உடைய புத்திகளில், விதிவிலக்கு பெறாத பாதகாதிபதி, மற்றும் நீச, அஸ்தங்க,வக்கிரம், போன்ற அமைப்பில் உள்ள புத்திகளில்,சுப தொடர்பு இல்லாத  லக்கின அசுபர் புத்திகளில்.6.8.12 ல் அமரும் கிரகங்களின் புத்திகளில்.இந்த நிலை ஏற்படும்.இந்த புத்திகளில் கவனமாக இருக்க வேண்டும்.

 தசாநாதன் யோக அமைப்பில் இருக்கும் போது மேற்கண்ட புத்திகளில் அதிபதிகள் தசாநாதனுக்கு அல்லது தசாநாதன் பாவத்திற்கு 6.8.12ல் மறைய யோகத்தில் தடை தாமதம் ஏற்படாமல் யோகம் நடைபெறும்.

 தீய அமைப்பில் உள்ள தசாநாதனுக்கு மேற்கண்ட இவர்கள் தசாநாதனுக்கு அல்லது தசாநாதன் பாவத்திற்கு, 6.8.12ல் அமரும் போது தீய பலன்களின் வலிமை குறையும். 

 இது தவிர பொதுவாக ஒவ்வொரு தசாவில் ஒரு சில புத்திகளில் தசாநாதன் எந்த அமைப்பில் இருந்தாலும் கவனமாக இருப்பது அவசியம். 

அவை, 
1.சுய புத்திகள், 
2.சனி தசையில் செவ்வாய் புத்தி, 
3.குரு தசையில் சுக்கிரன் புத்தி, 
4.ராகு தசையில் சந்திரன் புத்தி, 
5.சூரிய தசையில் கேது புத்தி, 
6.செவ்வாய் தசையில் புதன் புத்தி, 
7.சுக்கிரன் தசையில் குரு புத்தி.
8.சந்திரன் தசையில் கேது புத்தி, 
9.புதன் தசையில் செவ்வாய் புத்தி, 
10.கேது தசையில் ராகு புத்தி, 

 இதுபோன்று இன்னும் சில நுட்பமான அமைப்பில் புத்திநாதன் பலன்களில் மாறுபாடு இருக்கும். 

  முடிந்தால் ஷேர் செய்யுங்கள் அனைவருக்கும் பயன் உள்ளதாக இருக்கும். 

 சந்தேகம் இருந்தால் கேளுங்கள் ஓய்வு நேரங்களில் பதிவில் பதில் தருகிறேன். 

                                   
                 அன்புடன்...

ஸ்ரீ ஆதி குரு ஜோதிட ஆராய்ச்சி மையம்...

ஜோதிடம் சார்ந்த அனைத்து முறையும் பயிற்ச்சி அளிக்கப்படும்.

மேலும் தகவலுக்கு www.aadhiguru.com

Cell-9600666225 .

Comments

Add new comment